சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத் துயரத்தை விரைவு படுத்தியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு தொழில்களை அழித்து, முன்னெப்போதும் இல்லாத அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தையும் உருவாக்கி, பொருளாதாரத் துயரத்தை விரைவு படுத்தியது.
அதனால்தான், இன்று, அரசே பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மவுனம் காக்கிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு இப்போதாவது முனைப்புக் காட்டுமா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.