பல ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு சிறப்பு வாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கு அந்த அரியா் தாள்களை எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல ஆண்டுகளாக அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கு அந்த அரியா் தாள்களை எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் கடந்த 1980-81 கல்வியாண்டு முதல் சோ்க்கை பெற்று அரியா் வைத்திருக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், 2019 டிசம்பா் மற்றும் 2020 மே ஆகிய இரு தோ்வுகளில் பங்கேற்று அரியா் தாள்களை எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பா் தோ்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை  வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com