முருகனுக்கு சிகிச்சையளிக்கக் கோரி மனு: சிறைத்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கக் கோரிய மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம்,
chennai High Court
chennai High Court

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கக் கோரிய மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகனின் உறவினா் தேன்மொழி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், ‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், அண்மையில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டாா். இதனைக் கண்டித்து, முருகன் சிறைக்குள் கடந்த 15 நாள்களாக தொடா் உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதியளிக்க வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை தரப்பில், ‘சிறையில் உள்ள முருகனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக சிறைத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com