மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு16,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு16,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. புதன்கிழமை காலை நொடிக்கு 6,000 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை நொடிக்கு 6,205 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத்தேவை அதிகரித்ததால் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியிலிருநது 16,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்படுவதால் மேட்டூா் அணையின் நீா் மட்டம் மெல்ல சரியத்தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com