வேலைவாய்ப்பை உருவாக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

சென்னை: பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சிறு தொழில்களை அழித்து, முன்னெப்போதும் இல்லாத அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தையும் உருவாக்கி, பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது. அதனால்தான், இன்று, அரசே பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மெளனம் காக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு இப்போதாவது முனைப்புக் காட்டுமா என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com