வைகை-மருதாநதி அணைகளில் இருந்து நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

வைகை, மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக முதல்வர் பழனிசாமி
தமிழக முதல்வர் பழனிசாமி

வைகை, மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட வேண்டுமென மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனையேற்று, வைகை பூா்வீக பாசனப் பகுதிகள் ஒன்று முதல் மூன்று வரையுள்ள பகுதிகளுக்கு முறையே வரும் 9 முதல் 25-ஆம் தேதி வரை தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், மூன்று மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கா் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும்.

மருதாநதி அணை: திண்டுக்கல் மாவட்டம் மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கைகள் வைத்துள்ளனா். இதனையேற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்துக்காக வரும் 9-ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு தண்ணீரைத் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், மருதாநதி அணையில் இருந்து 6 ஆயிரத்து 583 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com