சென்னை: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், மேலும் அனைவரும் இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றார்.