திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான பொதுக்குழுக் கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான பொதுக்குழுக் கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் முதல் முறையாக பொதுக்குழுக் கூட்டம் அறிவாலயத்தில் அல்லாமல் வெளியே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
தீர்மானம் : 2
தீர்மானம் : 3
தீர்மானம் : 4
பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தமிழக மக்களை முதலில் எதிர்பார்க்க வைத்து முடிவில் ஏமாற்றி, இன்றைக்கு மாநில உரிமைகளைப் பறிகொடுத்து, மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியையும் பெற முடியாமல், எதிர்ப்போம் என்று கூறிய மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் தன்னிச்சையாக இணங்கி, ஆதரவு தெரிவித்து - “இரட்டை வேடமும் கபட வேடமும்” போட்டு அ.தி.மு.க. ஆட்சி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து வருவதற்கு தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 5
மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து - “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் அதிமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது.
நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டி மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவதற்கு தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு மிக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 6
அதிமுக ஆட்சியாளர்கள் மீது சரமாரியாக நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளை எல்லாம், “துருப்புச்சீட்டாக” அச்சுறுத்தும் ஆயுதங்களாக வைத்துக் கொண்டு - அதிமுக அரசை “பிளாக்மெயிலுக்குட்படுத்தி” - தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கையும்; அடிமைகளாகிவிட்டதால் அதிமுக அமைச்சர்களைக் போர்த்திக் காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் பிற்போக்குத்தனமான செயலையும்; சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும்; இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த வேதனையுடன் பதிவு செய்வதுடன், மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 7
மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன், காவிரி டெல்டா மாவட்டங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம், கதிராமங்கலம் ஆயில் குழாய் பதித்தல், தேனியில் நியூட்ரினோ, சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை, அனைத்துத் தேர்வுகளையும் இந்தி மொழியில் மட்டும் எழுத அனுமதிப்பது என மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் பல்வேறு தமிழ் விரோத - தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு இங்குள்ள அதிமுக அரசு முனுமுனுப்பேதுன்றித் துணை போவதுடன், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியின் மதவாத, தமிழக விரோத கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும், ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலும் அதிமுக ஆட்சி நடத்துவதற்கும்; தமிழை, தமிழர்களை, தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கும்; தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 8
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து சந்தி சிரித்து வருவதற்கும், நாளொரு கொலையும், பொழுதொரு கொள்ளையுமாக நடைபெற்று நாட்டையே உலுக்கி வருவதற்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 9
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், தமிழக ஆளுநர், அவர்களை விடுவிப்பதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. “அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தமிழக ஆளுநர் அவர்கள், முதலமைச்சரிடம் கூறிவிட்டதாக வெளிவந்த செய்தியையும் முதலமைச்சர் மறுக்கவில்லை. ஆகவே அதிமுக அரசு உடனடியாக 7 பேர் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவின்படி தமிழக ஆளுநர் அவர்கள், 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 10
சென்னை மாநகரமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் விதத்தில் அலங்கோல ஆட்சி நடத்தும் அதிமுக அரசுக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 11
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய கோட்பாட்டினை உலகிற்குச் சொன்ன அய்யன் திருவள்ளுவருக்கு, “காவி” வண்ணம் பூசி கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வினருக்கும், தஞ்சை - பிள்ளையார்பட்டியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கும் - அதன் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளுக்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 12
கடந்த மூன்று வருடங்களாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - “பஞ்சாயத்து ராஜ்” சட்டத்தின் நோக்கத்தைச் சிதறடித்து - உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இனியும் நீதிமன்றங்களை ஏமாற்றி காலதாமதம் செய்யாமல், விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 13
தீர்மானம் : 14
தீர்மானம் : 15
தீர்மானம் : 16
கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து, மனித உரிமைகளுக்கும், காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகளுக்கும், மக்களாட்சி மாண்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் : 17
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 18
தீர்மானம் : 19
தீர்மானம் : 20