நவ.10: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னையில் சில தினங்களாக இறங்கு முகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரித்துள்ளது. 
நவ.10: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு


சென்னை: சென்னையில் சில தினங்களாக இறங்கு முகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரித்துள்ளது. 

சுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே கடந்த மாதம் ஏறுமுகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.92 ஆகவும், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் ரூ.69.67 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com