எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 227 விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த பஷீர் ரகுமான் (58) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், சிவக்குமார் (25), வீரமணி (43), முருகன் (28) உள்ளிட்ட 3 மீனவர்களும் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 35 கடல்மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.