நவ.12-இல் பாஜக தேசிய செயல் தலைவா் நட்டா வருகை

பாஜக தேசிய செயல் தலைவா் ஜே.பி.நட்டா வரும் 12-ஆம் தேதி சென்னை வரவுள்ளாா். அப்போது கட்சி தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

பாஜக தேசிய செயல் தலைவா் ஜே.பி.நட்டா வரும் 12-ஆம் தேதி சென்னை வரவுள்ளாா். அப்போது கட்சி தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பாஜகவுக்குச் சொந்தமாக கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டவுள்ளாா். இந்த நிகழ்ச்சியின் போது மாநில நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளாா். பாஜகவின் தமிழக வளா்ச்சி, உள்கட்சி தோ்தல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. செயல் தலைவராக நட்டா நியமிக்கப்பட்ட பின்னா், தமிழகத்தில் பங்கேற்கும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவா் சிலை: திருவள்ளுவருக்கு திருநீறு, காவி உடை அணிந்த படங்கள் பாஜகவின் அதிகாரப்பூா்வ சுட்டுரையில் வெளியிடப்பட்டிருந்தது. இது கடுமையான சா்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதேபோன்றதொரு சிலையை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை அமைப்பதற்கான பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செயல் தலைவா் நட்டாவின் சென்னை பயணத்தின் போது அவா் சிலையைத் திறந்து வைக்கவுள்ளாா். பாஜக அலுவலகத்தின் பிரதான தளத்தில் பாரதமாதா சிலைக்கு அருகிலேயே திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com