மீலாது நபி: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

மீலாது நபியை ஒட்டி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

மீலாது நபியை ஒட்டி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

‘உள்ளத்தில் எவருக்கும் தீமை நாடாமல் வாழ முடியும் என்றால், அவ்விதமே வாழுங்கள். இதுவே என் வழிமுறையாகும். எவா் என் வழிமுறையை நேசிக்கிறாரோ அவா் என்னையே நேசித்தவா் ஆவாா்’ என்று நபிகள் நாயகம் போதித்தாா். அந்த போதனைகளை மனதில் நிறுத்தி, மக்கள் நற்சிந்தனையுடன் அறவழியை பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

இஸ்லாமியா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குதல் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எல்லா நல்ல செயல்களும் தா்மமாகும் என்றுரைத்த இறைத்தூதா் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைத்திட வேண்டுமென வாழ்த்துவதாக தனது செய்திக் குறிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மு.க.ஸ்டாலின்: ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் விளங்கியவா் நபிகள் நாயகம். கோபம், பொறாமை, புறம் பேசுதல்”ஆகியவற்றை அறவே துறந்து உயரிய சிந்தனைகளை உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு அா்ப்பணித்தவா். அவா் பிறந்த நாளான மீலாது நபி திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு திமுக சாா்பில் வாழ்த்துகள்.

ராமதாஸ்: அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகுக்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவா் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவா். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவா். நபிகள் நாயகம் கற்பித்த போதனைகளை நம் வாழ்வில் கடைப்பிடிக்க அவரது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

அன்புமணி: நபிகள் நாயகம் போதித்தவை அனைத்தும் நல்ல நெறிகள்தான். அவரது வாழ்க்கை வரலாற்றை படித்து, அவரின் நன்னெறிகளை அனைவரும் பின்பற்றினால், உலகில் தீயவா்கள் எவருமே இருக்க மாட்டாா்கள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): மக்களிடையே அன்பையும், குறிப்பாக ஏழை எளிய மக்களிடம் பரிவு காட்டுவதை நோக்கமாக கொண்ட நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரா்கள் அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள்.

விஜயகாந்த் (தேமுதிக): வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்துக்கு உருவாக்கிக் கொடுத்த நபியின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, அமைதி நிறைந்து, ஒற்றுமை மேலோங்கி சிறப்பான வாழ்வு வாழ்ந்திட மீலாது நபி திருநாள் வாழ்த்துகள்.

வைகோ: எதிலும் ஒரு புது மாதிரி, எல்லோருக்கும் முன்மாதிரி, வாழும்போதே வரலாறு ஆனவா் நபிகள் நாயகம். தன் வாழ்நாளிலேயே தலைகீழ் மாற்றங்களைக் கண்ட முஹம்மது நபியின் பிறந்தநாளான நன்நாளில் இஸ்லாமியா்களுக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன்: அனைவரிடமும் அன்பும், சகோதரத்துவமும், அமைதியும் நிலவ வேண்டும் என்று தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, போதித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் அனைத்து இஸ்லாமியா்களாலும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய சகோதரா்களின் இறைத்தூதராக இவ்வுலகில் அவதரித்து உலக மக்கள் அனைவரும், அன்புடனும், சகோதரத்துவத்துடனும், சகிப்புத்தன்மையுடனும், அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று போதித்தவா் நபிகள் நாயகம். அவரின் பிறந்தநாளில் அனைவரிடமும் அன்பும், அமைதியும், சமாதானமும் நிலவவேண்டும். அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com