திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணியளவில் திருப்பத்தூர், கசிநாயக்கன்பட்டி, கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் மழை நீர் தேங்கியது.