சென்னை : சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தீ விபத்தை அறிவிக்கும் அலாரம் ஒலித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அலாரத்தில் இருந்து தீ விபத்துக்கான அபாய ஒலி ஒலித்தது. இதையடுத்து, பயணிகள் உடனடியாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு வந்ததால் மக்கள் அச்சம் அடைந்து, வெளியேறத் தொடங்கினர்.
ஆனால், தானியங்கி அலாரம் தவறுதலாக ஒலித்துவிட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பின்னர் கண்டுபிடித்து அறிவித்தது.
இதனால் சற்று நேரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.