
மயிலாடுதுறையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உற்சவத்தை ஒட்டி, மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினார்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவத்தை ஒட்டி, காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை மயிலாடுதுறைக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிகாலை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினார். தொடர்ந்து, அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...