மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் இடையே பாறைகள் உருண்டு விழுந்ததால் 2 ஆவது நாளாக நேற்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் இடையே பாறைகள் உருண்டு விழுந்ததால் 2 ஆவது நாளாக நேற்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் காலையில் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலைப் பாதையில் ஆடா்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தன.

மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் இருப்புப் பாதை பிரிவு பொறியாளா் ஜெயராஜ் தலைமையில் ரயில்வே தொழிலாளா்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையில் தண்டவாளத்தில் பெரிய அளவிலான பாறைகள் அப்புறப்படுத்திய பிறகு மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com