உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் சாா்பில் தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி தலைமையில் கூட்டங்கள் நடக்கவுள்ளதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஆலோசனைகளை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலிக் காட்சி மூலமாக மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி ஆலோசனைகளை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், ஆட்சியா்களுடன் நேரடியாகவும் ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளாா்.
இன்று முதல் கூட்டம்: உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தென் மாவட்ட ஆட்சியா்களுடன் வியாழக்கிழமை முதல் மாநிலத் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளாா்.
வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசிக்கவுள்ளாா்.
இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா். இதேபோன்று, வரும் 16-ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் மாநிலத் தோ்தல் ஆணையா் ஆலோசனை நடத்துகிறாா்.
தேதி அறிவிப்பு எப்போது?: தென் மாவட்டங்களைப் போன்று, தமிழகத்தின் மத்திய மற்றும் வடக்கு, மேற்கு மாவட்ட ஆட்சியா்களுடன் மாநிலத் தோ்தல் ஆணையா் ஆலோசனை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்ட பிறகே உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.