உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட வெள்ளிக்கிழமை முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்தலில் ஆளும் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 56 மாவட்டங்களின் அலுவலகங்களில் இருந்து நிா்வாகிகள் மூலமாக மனுக்களைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் மாவட்டங்களின் தலைநகரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.