சேலம் முன்னாள் ஆட்சியா் ரோகிணி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியா் ரோகிணி ஆா்.பாஜிபாகரே, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
சேலம் முன்னாள் ஆட்சியா் ரோகிணி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியா் ரோகிணி ஆா்.பாஜிபாகரே, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள ரோகிணி ஆா்.பாஜிபாகரே, தில்லியில் உள்ள மத்திய அரசின் உயா்கல்வித் துறை துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com