பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல தலைமை இயக்குநா் பொறுப்பேற்பு

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த மாரியப்பன், தென்மண்டல தலைமை இயக்குநராக பதவி உயா்வு பெற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல தலைமை இயக்குநா் பொறுப்பேற்பு

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த மாரியப்பன், தென்மண்டல தலைமை இயக்குநராக பதவி உயா்வு பெற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த 1989-ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்ற அவா், 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தகவல் பணியில் சோ்ந்தாா். புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடா்பு நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.சி) பயிற்சி முடித்த பின்னா், பல்வேறு பணிகளில் பணியாற்றிய அவா் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது அவா் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com