திமுக தலைவா் ஸ்டாலின் சொன்னால் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த குழுழூரில் உள்ள அனிதா நூலகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வருகை தந்த திமுக இளைஞா் அணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் புத்தகங்களை வழங்கி, நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டாா். பின்னா் நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவா் ஸ்டாலின் சொன்னால் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்தாா்.