குன்னூரில் பலத்த மழையால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது

அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 
குன்னூரில் பலத்த மழையால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 

குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com