திருச்சி விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா், இங்கு தினமும் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்திவரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 13.28 லட்சம் மதிப்பிலான 349 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த லோகிதாஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.