பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து புதன்கிழமை (நவ. 20) நீா் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, இரண்டு அணைகளில் இருந்தும் வரும் 20-ஆம் தேதி முதல் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்படும்.
இதனால் 1,925.95 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயா் மகசூல் பெற வேண்டும் என்று தனது செய்திக்குறிப்பில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.