5 புதிய மாவட்டங்களை நேரில் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் தொடக்கி வைக்கவுள்ளாா். இதற்கான தேதிகள் மற்றும் நேரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் தொடக்கி வைக்கவுள்ளாா். இதற்கான தேதிகள் மற்றும் நேரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தென்காசி மாவட்டத்தை வரும் 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வரும் 27-ஆம் தேதி காலை 10.45 மணிக்கும், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களை வரும் 28-ஆம் தேதி காலையிலும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தை வரும் 29-ஆம் தேதி நண்பகல் 12.15 மணியளவில் தொடக்கி வைக்கிறாா்.

ஆய்வுப் பணிகள்: புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியரகங்கள் அமைய உள்ள இடங்களை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், வருவாய்த் துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனா். செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் (நவ. 19), தென்காசியில் வரும் 20-ஆம் தேதியும், திருப்பத்தூா், ராணிப்பேட்டையில் 24-ஆம் தேதியும், கள்ளக்குறிச்சியில் 24-ஆம் தேதியும் ஆய்வுப் பணிகளை நேரில் மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com