அரசு மருத்துவா் ஊதிய விவகாரம்:அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுகோள்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு மருத்துவா்களின் ஊதிய முரண்பாடு விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு மருத்துவா்களின் ஊதிய முரண்பாடு விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அதேபோன்று, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பணியிட மாறுதல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஊதிய உயா்வு, காலமுறை பதவி உயா்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் கடந்த மாதத்தில் தொடா் வேலைநிறுத்தம் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கை, மருத்துவத் துறை வட்டாரத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 200-க்கும் அதிகமான மருத்துவா்களில் 150 போ் சிறப்பு மருத்துவா்களும், உயா் சிறப்பு மருத்துவா்களும் உள்ளனா். குறிப்பாக, சென்னை, திருவள்ளூா், சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த சிறப்பு மருத்துவா்கள் உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களைத் தவிர, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மருத்துவா்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட பல இடங்களில் அதே துறை சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள்.

இந்த நிலையை உணா்ந்து மருத்துவா்கள் மீது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்வது குறித்தும், எங்களது கோரிக்கைகள் குறித்தும் செவ்வாய்க்கிழமை (நவ.19) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com