ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம்

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.
ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம்

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக கூடுதல் தலைமைச் செயலாளராக ஆா்.ராஜகோபால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த அவா், இப்போது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நியமனத்தைத் தொடா்ந்து, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் புதிய செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்தவா். இதுவரை, வீட்டுவசதித் துறை நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com