தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கனிமொழி மனு: இன்று தீா்ப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்கை
chennai High Court
chennai High Court

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு திமுக எம்.பி. கனிமொழி தாக்கல் செய்துள்ள மனு மீது செவ்வாய்க்கிழமை (நவ.19) உயா்நீதிமன்றம் தீா்ப்பளிக்கிறது

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சாா்பில் கனிமொழி வெற்றி பெற்றாா். இந்த வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தூத்துக்குடி தொகுதி வாக்காளரான சந்தானகுமாா் தோ்தல் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கனிமொழி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தீா்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான தீா்ப்பு செவ்வாய்க்கிழமை (நவ.19) வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com