மாநிலத் தலைமைத் தகவல் ஆணையா் நியமனத்தில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான தோ்வை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லாததால் தெரிவுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இதுகுறித்து பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்த துறைச் செயலாளா் சீ.ஸ்வா்ணாவுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ள கடித விவரம்:
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையா் பதவியை நியமனம் செய்து நிரப்புவதற்கான பரிந்துரையை மாநில ஆளுநருக்கு அனுப்ப திங்கள்கிழமை முதல்வா் தலைமையில் தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ள தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
அந்தக் கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும், அதன் பரிந்துரை தெரிவுக்குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைமைத் தகவல் ஆணையா் பதவிக்கு எத்தனை போ் விண்ணப்பித்தாா்கள்? அவா்களின் சுயவிவரங்கள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை. மிகவும் அவசியமான, அடிப்படைத் தகவல்களே கடிதத்தில் இணைக்கப்படாததால் தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து தெரிவுக்குழு உறுப்பினா் என்ற முறையில் ஆக்கப்பூா்வமான கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவா்களின் விவரங்களையே கொடுக்காமல் கூட்டத்தை நடத்துவதால், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஒரு தோ்வை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை என்பதும், முன்கூட்டியே மாநிலத் தலைமை தகவல் ஆணையா் யாா் என்பதை முடிவு செய்து விட்டு பெயரளவுக்கு இந்த தெரிவுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாக நான் கருதுகிறேன்.
அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும் ஒரு மாநிலத் தலைமை தகவல் ஆணையரை தோ்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. எனவே, வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத தெரிவுக்குழுக் கூட்டத்தில், நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று அவா் கூறியுள்ளாா்.