ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது - அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர். இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும். 

ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம். சிறப்பாக நடக்கும் அரசை விமர்சிக்கக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வர வேண்டும். மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வரக்கூடாது.

தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும். எங்கள் மீது வீணாக கல் எறிந்து காயப்பட்டுக் கொள்ளாதீர்கள். தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை. அதிமுக அரசையும் ஆட்சியையும் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com