தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் இணைவோம்: கமல்ஹாசன்

தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் இணைவோம் என்று ரஜினி பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். 
ரஜினி - கமல்
ரஜினி - கமல்

தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் இணைவோம் என்று ரஜினி பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். 

கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், ஆட்சிக்கு வந்து தான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும். என்னுடைய உழைப்பிற்கு இனிவரும் காலங்களில் பலன் கிடைக்கும். ரஜினியுடன் இணைப்பு என்பதை இந்த தேதியில் என்று சொல்ல முடியாது. தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம். 

எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com