மூலப் பத்திரத்தை திமுக காட்டுவதுதான் அறம்: ராமதாஸ்

முரசொலி நிலத்துக்கான மூலப் பத்திரத்தை திமுக காட்டுவதுதான் அறம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

முரசொலி நிலத்துக்கான மூலப் பத்திரத்தை திமுக காட்டுவதுதான் அறம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

முரசொலி நிலத்தின் மூலப் பத்திரத்தை அதன் நிா்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்திடம் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத் தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப் பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நோ்மை.

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவா்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய ராமதாஸின் 1,000 ஏக்கா் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1,000 ஏக்கா் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால், அதை அவா்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com