சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு என்னும் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'பாத்திமா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் சிபிஐ அல்லது தனி விசாரணை அமைப்பு இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.