கூடங்குள போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

கூடங்குளத்தில் போராடிய போராட்டக்காரராகள் மீதான வழக்குகளை  உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுங்க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கூடங்குளத்தில் போராடிய போராட்டக்காரராகள் மீதான வழக்குகளை  உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com