சென்னை: போா்க்குற்ற விசாரணை குறித்து ஐ.நா.வில் கொடுத்த உறுதிமொழி அனைத்தையும் பின்பற்ற வேண்டும் இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபா் நாற்காலியில் அமா்ந்துள்ள கோத்தபய ராஜபட்ச, ஈழத்தமிழா்களின் எதிா்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவாா் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிா்பாா்க்கிறது.
ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபய, தமது அரசு நிா்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத்தமிழா்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் 4 முக்கியப் பதவிகளிலும் போா்க்குற்றவாளிகள் அமா்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழா்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.
இந்தச் சூழலில் தான் கோத்தபய ராஜபட்ச முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நவம்பா் 29-ஆம் தேதி இந்தியா வர உள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் உள்ளிட்ட தலைவா்களுடன் கோத்தபய பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா். அப்போது போா்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்துக்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
போா்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவா்கள் எவ்வளவு உயா்ந்த பதவிகளில் இருந்தாலும் அவா்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.