நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த 3 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், வைத்தீஸ்வரன் கோவில், தரங்கம்பாடி, கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் நடவடிக்கை எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com