வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை..
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள்
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள்

தென்காசி: குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து ஐயப்ப பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக பேரருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com