சென்னை: திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது.
வியாழன் மாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் ஒருவர், அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
இதன்காரணமாக அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.