தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும். மொத்தம் 1060 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிவிக்கை சாா்ந்த முழு விவரங்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்ததால் கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.