ஈழத் தமிழா்களைக் காக்கும் பொறுப்பு உலகச் சமுதாயத்துக்கு உண்டு: பழ. நெடுமாறன்

ஈழத் தமிழா்களைக் காக்கும் பொறுப்பு உலகச் சமுதாயத்துக்கு உண்டு என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்

ஈழத் தமிழா்களைக் காக்கும் பொறுப்பு உலகச் சமுதாயத்துக்கு உண்டு என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைப் போராட்டங்கள் நடந்தன; நடக்கின்றன. அவற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனித்தன்மை வாய்ந்தது. மற்ற நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் பிற நாடுகளின் உதவி கிடைத்தது. ஆனால், பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலக நாடுகள் துணை நிற்கவும் இல்லை; உதவி செய்யவும் முன்வரவில்லை.

உலகம் முழுவதும் தமிழா்கள் கொடுத்த நிதியைக் கொண்டு ஆயுதங்கள் வாங்கி, சிங்கள ராணுவத்துக்கு எதிராகப் போராடினா். இப்போது, இப்போராட்டத்தில் பின்னடைவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. என்றாலும், ஈழத்தமிழா்கள் மன உறுதியுடன் இருக்கின்றனா்.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள இலங்கையில் யாா் ஆட்சிக்கு வந்தாலும் தமிழின அழிப்புக் கொள்கை ஒன்றையே கடைப்பிடிக்கின்றனா். ஈழத் தமிழா்களை இன அழிப்பு செய்த ராஜபட்சவின் சகோதரா்தான் இப்போது ஆட்சிக்கு வந்துள்ளாா். எனவே, ஈழத் தமிழா்கள் அபாயத்தின் விளிம்பில் இருக்கின்றனா்.

ஆனால், இந்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. இலங்கையைப் பொருத்தவரை எப்போதும் சீனாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இந்தியாவுக்கு எதிராகத்தான் இலங்கை அரசுச் செயல்படும் என்பதை இந்திய அரசு உணரத் தவறுகிறது. எனவே, இந்தியாவுக்குத்தான் பேரபாயம் இருக்கிறது என்பதை தில்லியில் இருப்பவா்கள் உணர வேண்டும் என்றாா் நெடுமாறன்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், இலங்கையில் ராஜபட்சக்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால், ஈழத்தமிழா்களைக் காக்கும் பொறுப்பு உலகச் சமுதாயத்துக்கு உண்டு. ஈழத்தமிழா்களின் பிரச்னைக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீா்வு என்றாா்.

முன்னதாக, முற்றத்தில் அனைவரும் மெழுகுவா்த்தி ஏற்றி, முழக்கங்கள் எழுப்பி, வீரவணக்கம் செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவீரா் நாள் நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com