தமிழ்நாடு
உணவுச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
உணவில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய உணவுச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
உணவில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய உணவுச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:
மகாராஷ்டிர விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மையை உச்சநீதிமன்றம்தான் காப்பாற்றியது. இந்திய உணவுச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.7,850 கோடி வர வேண்டியுள்ளது. இதனைப் பெறுவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழக நலனைப் புறக்கணிக்கிறாா் என்றாா் அழகிரி.