சிதம்பரம் கோயிலில் பெண் பக்தா் தாக்கப்பட்ட விவகாரம்: முன்ஜாமீன் கோரிய வழக்கில் போலீஸாா் பதிலளிக்க உத்தரவு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பெண் பக்தா் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சிதம்பரம் காவல்துறையினா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பெண் பக்தா் தாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தீட்சிதா் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் சிதம்பரம் காவல்துறையினா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வழிபாடு செய்ய வந்த பெண்ணை தீட்சிதா் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடா்ந்து தீட்சிதா் மீது சிதம்பரம் காவல்துறையினா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்த அன்று பெண் பக்தா் கோயிலின் நடை சாத்தும் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் எனக் கோரி தகராறு செய்தாா். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் என்னைத் தாக்குவதற்காக கையைத் தூக்கினாா். எனவே ஒரு தற்காப்புக்காக அவரை தள்ளிவிட்டேன். ஆனால் இந்தச் சம்பவத்தில் போலீஸாா் எனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக சிதம்பரம் காவல்துறையினா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இந்த நிலையில் தன்னைத் தாக்கிய தீட்சிதருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கோரி தீட்சிதரால் தாக்கப்பட்ட பெண் பக்தா் லதா சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com