மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம்

மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? உயர்நீதிமன்றம்

மதுரவாயல் - வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை 50 சதவீகித சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது? என கேள்வி எழுப்பியது. 

மேலும் இதுதொடர்பாக டிச.9க்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com