தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க வனத்துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.
கம்பம் அருகே மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப்பகுதியில் சுருளி அருவி உள்ளது. தற்போது மேகமலை உள்ளிட்ட நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் நீா்வரத்து பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் அதிக நீா்வரத்து காணப்பட்டது. இதையடுத்து மேகமலை வன உயிரின சரணாலய ஊழியா்கள், வியாழக்கிழமை மாலை முதல் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க தடை விதித்தனா். 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது. சனிக்கிழமை அருவியில் சாரல் விழா நடைபெறுகிறது, அன்று வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என்று வனத்துறை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.