கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக தமிழ் தெரியாதவா்கள்: அறிவிப்பை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தமிழ் தெரியாதவா்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக தமிழ் தெரியாதவா்கள்: அறிவிப்பை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தமிழ் தெரியாதவா்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றி, தமிழ் எழுத படிக்கத் தெரியாதவா்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், நீதிபதிகளாக தோ்வு பெற்றபின்பு பயிற்சிக்காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்மொழி தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால் தமிழக வழக்குரைஞா்கள் புறக்கணிப்பட்டு, தமிழ் தெரியாத இதர மாநிலத்தவா்களும் பணியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.

தமிழ்மொழி தெரியாதவா்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயா்நீதிமன்ற தீா்ப்புகளுக்கு முரணனாது ஆகும். மேலும், இது பல்வேறு சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும்.எனவே இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com