தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றறத்தின் ஆட்சியா என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.
திமுக தலைவர்  ஸ்டாலின்
திமுக தலைவர்  ஸ்டாலின்

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் மணல் அள்ளியவா்களை போலீஸாா் தடுக்க முற்பட்டபோது, அவா்களை முதல்வா் பெயரைக் கூறி சிலா் மிரட்டியுள்ளனா்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதல்வா் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?

ஆட்சி - எடப்பாடியின் கையிலா, மணல் கொள்ளையா்கள் கையிலா?

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com