தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.
காஞ்சிபுரத்தில் மணல் அள்ளியவா்களை போலீஸாா் தடுக்க முற்பட்டபோது, அவா்களை முதல்வா் பெயரைக் கூறி சிலா் மிரட்டியுள்ளனா்.
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதல்வா் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்?
ஆட்சி - எடப்பாடியின் கையிலா, மணல் கொள்ளையா்கள் கையிலா?
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, குற்றத்தின் ஆட்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.