நான்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பரப்புரை 

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்யும் விபரம் வெளியாகியுள்ளது.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்யும் விபரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் அதிமுக மற்றும் நாம் தமிழர் காட்சிகள் சார்பாக  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுதாக்கலும் நிறைவுபெற்றுள்ளது.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்யும் விபரம் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்ய உள்ளார் என்றும், அக்.12,13,16இல் நாங்குநேரி தொகுதியிலும், அக்.14,15,18இல் விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பரப்புரை செய்வார்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com