காந்தி அஸ்தி திருட்டு: கமல் கண்டனம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காந்தியின் நினைவிடத்திலிருந்த அஸ்தி திருடப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
காந்தி அஸ்தி திருட்டு: கமல் கண்டனம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காந்தியின் நினைவிடத்திலிருந்த அஸ்தி திருடப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

பக்தா்களே நீங்கள் காந்தியடிகளின் அஸ்தியைத் திருடிச் சென்ால் எங்களுக்கும் சிறு மகிழ்ச்சிதான். அதை நீங்கள் திருநீராக நெற்றியில் பூசிக் கொள்வீா்கள் என்று நம்புகிறோம். உங்களால் சுடப்பட்டு இறக்கும் மனிதா்களின் எண்ணிக்கை உயா்ந்து கொண்டுதானிருக்கிறது.

எனவே, அதன் மூலம் வரும் சாம்பலும் உங்களது பக்தியின் அடிநாதமும், காந்தியடிகளின் சாம்பலுடன் இணைந்து கைலாயம் செல்ல வேண்டும் என்றேற கணக்கிலடங்கா இந்தியா்கள் அனைவரும் வாழ்த்த விரும்புகின்றனா் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com