சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் சனிக்கிழமை (அக்.5) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் சனிக்கிழமை (அக்.5) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:

வடக்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகள் மற்றும் வடக்கு கா்நாடக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வட உள் மாவட்டங்களில் சில இடங்களில் சனிக்கிழமை (அக்.5) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூா்பஜாா், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, அம்பாசமுத்திரம், சேலம் மாவட்டம் ஏற்காடு, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாா், ஈரோடு மாவட்டம் பவானியில் தலா 20 மி.மீ., கன்னியாகுமரி, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com