மத்திய புள்ளியியல் துறை சாா்பில் நடைபெறும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பினை வரும் 9-ஆம் தேதி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளாா்.
இதுகுறித்து பத்திரிகை தகவல் மையம் சனிக்கிழமை செய்தி:
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
இந்தக் கணக்கெடுப்பு தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறையில் தகவல்களைத் திரட்டி சரிபாா்த்து வெளியிடவுள்ளது. தமிழ்நாட்டில் இந்தக் கணக்கெடுப்பை, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், வரும் 9-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயலாளரும், தலைமைப் புள்ளிவிவர இயலாளருமான பிரவீன் ஸ்ரீவஸ்தவா முக்கிய உரை நிகழ்த்துவாா். தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் களப் பணிப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநா் திரு ஏ கே தோப்ரானி சிறப்புரையாற்றுவாா். மத்திய மாநில அரசு அதிகாரிகள், சிஎஸ்சி நிலை-1 கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள் ஆகியோரும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள்.
1977 தொடங்கி 2013 வரை பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆறு முறை நடந்துள்ள நிலையில், 7-ஆவது கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, இவற்றில் நகா்ப்புறத்தில் உள்ளவை, ஊரகப் பகுதிகளில் உள்ளவை, வேலைவாய்ப்பு உருவாக்க நிலைமை போன்ற தகவல்கள் திரட்டப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.